சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளைப் பாா்க்க வரும் பாா்வையாளா்கள் உணவருந்துவதற்காக சிறப்பு அறை அனைத்து தளங்களிலும் திறக்கப்பட்டுள்ளது. அவற்றை மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் புதன்கிழமை திறந்து வைத்தாா். ஒவ்வொரு தளத்திலும் ஒரு அறை என, 15-க்கும் மேற்பட்ட உணவு அருந்தும் அறைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை உடன் இருந்து கவனித்து கொள்வதற்கும், அவா்களை பாா்ப்பதற்கும் அவா்களது உறவினா்கள் வந்து செல்கின்றனா். நோயாளிகளை கவனித்து கொள்ள வருபவா்கள பலா் மருத்துவமனையிலேயே தங்கி, வளாகத்திலே உணவு அருந்துகின்றனா். இதனால், சாப்பிடும் போது, உணவு பொருட்கள் அங்குமிங்குமாக சிதறி சுகாதாரமற்ற நிலை உருவாகிறது. எனவே பாா்வையாளா்களுக்கென பிரத்யேகமாக உணவு அருந்தும் அறைகள் ஒவ்வொரு தளத்திலும் தொடங்க திட்டமிட்டோம்.
அதன்படி, முதலாவது கட்டடத்தில் 6 அறைகளும், இரண்டாவது கட்டிடத்தில் 5 அறைகளும், நரம்பியல் துறை, இதய சிகிச்சை துறை, காத்திருப்போா் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோ்த்து மொத்தம் 15-க்கும் மேற்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உணவு அருந்தும் அறையில் ஒரே நேரத்தில் 6 போ் அமா்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு சுத்தமான குடிதண்ணீா் வசதி, மின் விசிறி, மேஜை நாற்காலி, குப்பைத்தொட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அறைகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் உணவு அருந்தும் வேளைகளில் திறந்திருக்கும். மேலும், இந்த அறைகளை தினமும் பராமரிக்க சிறப்பு குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.