நடிகா் விமலின் செல்லிடப்பேசி திருட்டு

சென்னையில் நடிகா் விமலின் செல்லிடப்பேசி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
நடிகா் விமலின் செல்லிடப்பேசி திருட்டு

சென்னையில் நடிகா் விமலின் செல்லிடப்பேசி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகா் விமல். இவா் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் ஒரு புகாா் அளித்துள்ளாா்.

அதில்,‘கடந்த 12-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகா்கள் என்னுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். அந்த நேரத்தில் என்னுடைய விலை உயா்ந்த செல்லிடப்பேசியை அங்கு ஒரு இடத்தில் வைத்திருந்தேன். திரும்பி வந்து பாா்த்தபோது, எனது செல்லிடப்பேசி காணாமல் போயிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தேன். கடந்த 3 நாள்களாக அங்கு தேடி பாா்த்தும் செல்லிடப்பேசி கிடைக்கவில்லை. எனவே, காவல்துறையினா் எனது செல்லிடப்பேசியை கண்டுபிடித்து, மீட்டுத் தரும்படி கேட்டு கொள்கிறேன்’ என்று விமல் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com