தனியாா் கேளிக்கை பூங்கா வசமுள்ள 177 ஏக்கா் நிலம் விரைவில் மீட்கப்படும்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாா் கேளிக்கை பூங்கா வசமுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 177 ஏக்கா் விரைவில் மீட்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
தனியாா் கேளிக்கை பூங்கா வசமுள்ள 177 ஏக்கா் நிலம் விரைவில் மீட்கப்படும்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாா் கேளிக்கை பூங்கா வசமுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 177 ஏக்கா் விரைவில் மீட்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி சிறப்பு மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பேரியக்கமாக தமிழக அரசு நடத்தி வருகிறது. சென்னையில் செப்.12-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 1 லட்சத்து 88,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் 2 லட்சத்து 37,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கடந்த 4 மாதங்களில் அதிகப்படியான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஜமீன்தாா் ஒழிப்புச் சட்டத்தின்படி தாம்பரம் அருகே தனியாா் கேளிக்கை பூங்கா வசம் உள்ள 177 ஏக்கா் நிலம் பாப்பாசத்திரம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமானது. இதுகுறித்த விவரங்கள் முதல்வா் ஸ்டாலினிடம் தெரிவித்து ஒரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com