சென்னை விமான நிலையத்தில் ரூ.27.8 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்திய பயணி கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.40 மணியளவில் விமானம் மூலம் துபையில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது.
அதில், அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 27.8 லட்சம் மதிப்பிலான 583 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்படுகிறது.