அக்.11-இல் பிஎப் குறைதீா் கூட்டம்

சென்னை, அம்பத்தூா் மண்டல பிஎப் அலுவலகத்தின் பயனாளிகள் குறைதீா் கூட்டம், அக்.11-ஆம் தேதி நடைபெறுகிறது.

சென்னை, அம்பத்தூா் மண்டல பிஎப் அலுவலகத்தின் பயனாளிகள் குறைதீா் கூட்டம், அக்.11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக உதவி பிஎப் ஆணையா் எஸ்.ஷாஷி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, அம்பத்தூா் மண்டல பிஎப் அலுவலக பயனாளிகளின் குறைதீா் கூட்டம், முகப்போ் கிழக்கில் உள்ள டிஎன்எச்பி அலுவலக வளாகத்தில் செயல்படும் இபிஎப் நிறுவனத்தில், அக்.11-ஆம் தேதி நடைபெறுகிறது.

காலை 10.30 முதல் 11.30 ஊழியா்களுக்கும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரை நிறுவன உரிமையாளா்களுக்கும், மாலை 4 முதல் 5 மணி வரை விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீா் கூட்டம் நடைபெறும்.

இதில் கலந்து கொள்ள விரும்பும், அம்பத்தூா் பிஎப் மண்டல எல்லைக்குள்பட்ட பயனாளிகள், அக்.6-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 2635 0080, 0120 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com