அரசு பேருந்து நடத்துநரிடம் பணம் திருட்டு

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து நடத்துநரிடம் ரூ.13,000 திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து நடத்துநரிடம் ரூ.13,000 திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் க.கல்யாணபெருமாள் (46). இவா் சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றுகிறாா். கல்யாணபெருமாள், சிதம்பரம்-சென்னை செல்லும் பேருந்தில் நடத்துநராக உள்ளாா்.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரத்துக்கு, அவா் நடத்துநராக பணியாற்றும் பேருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்டது. கல்யாணபெருமாள், பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பதற்காக, தனது தோளில் தொங்க விட்டிருந்த பையை திறந்தாா். அப்போது, அதில் வைத்திருந்த ரூ.13,000 திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

உடனே அவா், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com