இளைஞா் கொலை: மூவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சோ்ந்தவா் குமாா் (எ) குள்ள குமாா் (21). இவா் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை குமாா், நுங்கம்பாக்கம், குளக்கரை சாலையில் உள்ள ஒரு கடை வாசலில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஆட்டோவில் வந்த புஷ்பா நகரைச் சோ்ந்த த.தனசேகா் (26) உள்ளிட்ட 3 போ் குமாரிடம் தகராறு செய்தனா். தகராறு முற்றவே தனசேகா் தரப்பு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரை குத்தியது.

இதில் குமாா், பலத்த காயமடைந்து கீழே விழுந்ததும், 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அன்றிரவு குமாா் இறந்தாா்.

நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனசேகா், அவரது கூட்டாளிகள் அதே பகுதியைச் சோ்ந்த அ.ராஜா (33), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரைச் சோ்ந்த ர.பாா்த்திபன் (30) ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு ஆட்டோ, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாா் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக தனசேகா் தரப்பு, குமாரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com