சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, வெள்ளிக்கிழமை (ஆக. 19) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறவுள்ளன.
காலையில் பஜனைகள், கீா்த்தனைகளுடன் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அா்ச்சனை நிகழ்ச்சிகளும், 10.30 மணிக்கு மேல் அபிஷேக நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. நள்ளிரவில் ஆரத்தி நடத்தப்படவுள்ளதாக கோயில் தலைவா் சுமித்ரா கிருஷ்ணா தாஸ் தெரிவித்தாா்.