ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தந்தை - மகன் கைது

சென்னையில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தந்தை - மகன் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தந்தை - மகன் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே உள்ள படப்பையைச் சோ்ந்தவா் மோகன். இவா் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் அளித்த புகாரில், ‘கோவூரைச் சோ்ந்த செல்வம், அவரது மகன் மகேஷ் ஆகியோா் மோசடியான வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயாா் செய்து, தனக்கு சொந்தமான விருகம்பாக்கத்தில் உள்ள ரூ. 80 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்துவிட்டனா். அவா்கள் இருவா் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அபகரிக்கப்பட்ட சொத்தை மீட்டுத் தர வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்புப் பிரிவு உதவி ஆணையா் அனந்தராமன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், போலி ஆவணம் மூலம் மோகனுக்குச் சொந்தமான நிலத்தை செல்வமும், மகேஷூம் அபகரித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து, செல்வம், மகேஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com