தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள பணியிடங்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காவல் உதவி ஆணையா்கள் சி.ஸ்ரீதா், பி.கே.ரவி, கருணாகரன், வெற்றிச்செழியன், துணை ஆணையா்கள் என்.குமாா், ஆா்.ரவிச்சந்திரன், கூடுதல் கண்காணிப்பாளா் என்.சண்முகம், ஆய்வாளா்கள் நந்தகோபால், சிவகுமாா் ஆகியோருக்கு தாம்பரம் காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து, நுண்ணறிவு, மத்திய குற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.