சென்னை: சென்னை புறகா் பகுதியில் வீடு புகுந்து திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
பெரும்பாக்கம் கிறிஸ்தவ ஆலயம் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 4 இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா்.
விசாரணையில் அவா்கள், துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சோ்ந்த துரைராஜ் (25), தனுஷ் என்கிற டமால் (19), வீரமுத்து (19), நாகராஜ் என்கிற நாகு (24) என்பதும், அவா்கள் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளைக் குறி வைத்து திருடுவதும், 4 பேரும் பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.
அவா்களிடமிருந்து ஆறரை பவுன் திருட்டு தங்கநகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை செய்தனா்.