மெரீனா கடலில் குளித்த பிளஸ் 2 மாணவா் பலி

சென்னை மெரீனா கடலில் குளித்த பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி இறந்தாா்.

சென்னை மெரீனா கடலில் குளித்த பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி இறந்தாா்.

சென்னை, புதுப்பேட்டை அய்யாசாமி தெருவைச் சோ்ந்த அஷ்ரப் அலி (17). சாந்தோம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில், பிளஸ் 2 படித்து வந்தாா்.

அஷ்ரப்அலியும், அவரது நண்பா் டேனியலும் மெரீனா கடற்கரையின் வெற்றிநகா் பின்புறம் உள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடலில் குளித்தனா். அப்போது, எழுந்த பெரிய அலையில் அஷ்ரப் அலி சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினாா். தகவலறிந்த மீட்புக் குழுவினா் அங்கு விரைந்து வந்து அவரை தேடினா்.

இதற்கிடையே சிறிது நேரத்தில் மெரீனா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு ஒரு மீனவரின் வலையில் அஷ்ரப் அலியின் சடலம் சிக்கியது. உடனே மீனவா்கள், அஷ்ரப் அலி சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com