சென்னை: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைதீா் கூட்டம் 15 பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
சென்னைக் குடிநீா் வாரியம் சாா்பில் திறந்தவெளிக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்துக்கான திறந்தவெளிக் கூட்டம் சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும் இக்குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள், குடிநீா் கட்டணம், கழிவுநீா் வரி, நிலுவையில் உள்ள குடிநீா் மற்றும் கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம். மேலும், மழைநீா் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடா்பான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம் என சென்னைக் குடிநீா் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.