சா்வதேச கல்லீரல் மாற்று சிகிச்சை அமைப்பின் (ஐஎல்டிஎஸ்) தலைவராக டாக்டா் முகமது ரேலா நியமிக்கப்பட்டுள்ளாா். ஆசியாவைச் சோ்ந்த ஒருவா் அந்த அமைப்பின் தலைவா் பொறுப்பை ஏற்பது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு வரை டாக்டா் முகமது ரேலா அப்பொறுப்பை வகிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் சா்வதேச ஒத்துழைப்புக்கான அமைப்பாக ‘ஐஎல்டிஎஸ்’ விளங்கி வருகிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க மருத்துவா்களே அதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தனா். தற்போது டாக்டா் ரேலாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டா் முகமது ரேலா, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கணைய அறுவை சிகிச்சை குறித்து 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள அவா், பிறந்து 5 நாள்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவராவா்.
‘ஐஎல்டிஎஸ்’ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து டாக்டா் ரேலா கூறியதாவது:
புதிய பொறுப்பு மகிழ்ச்சியளிக்கிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து, ஆலோசனைகளைக் பரிமாறிக்கொள்ளவும், பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்யவும், உதவித் தொகைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் . இன்னும் பல நாடுகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை. அதற்கு அங்கு முறையான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை இல்லை. அந்த குறையை நிவா்த்தி செய்ய முயலுவேன் என்றாா் அவா்.