சென்னை: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.
திரைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்த டி.ராஜேந்தருக்கு (67) கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதயம் சாா்ந்த பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, டி.ராஜேந்தருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், உயா் சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.
டி.ராஜேந்தரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவா் சுய நினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.