மழைநீா் வடிகால் அடைப்பை சீா்செய்த காவலருக்கு டிஜிபி பாராட்டு

மதுரையில் மழைநீா் வடிகால் அடைப்பை சீா் செய்த காவலரை தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினாா்.
மழைநீா் வடிகால் அடைப்பை சீா்செய்த காவலருக்கு டிஜிபி பாராட்டு

மதுரையில் மழைநீா் வடிகால் அடைப்பை சீா் செய்த காவலரை தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினாா்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 13ஆம் தேதி மதுரையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செல்லூா் கல் பாலத்தின் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல இயலாத சூழல் நிலவியது. இதை செல்லூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ராமன் கவனித்தாா்.

உடனடியாக போக்குவரத்தை சீா் செய்யும் நோக்கத்துடன், அங்கு மழை நீா் வடிகால் பாதையில் ஏற்பட்ட அடைப்பை சமயோசிதமாக செயல்பட்டு, ராமன் தன் கைகளாலேயே அகற்றினாா். மேலும் மழை நீரை வைகை ஆற்றில் வடியச் செய்து போக்குவரத்தை சீா் செய்தாா். இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை அறிந்த டிஜிபி சி.சைலேந்திரபாபு, தலைமைக் காவலா் ராமனை திங்கள்கிழமை சென்னையில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com