பெரம்பூரில் ரூ. 89 லட்சம் பணத்துடன் வந்த இளைஞரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
அம்பத்தூா் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் டெல்லிபாபு தலைமையில், போலீஸாா் அம்பத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனா். அப்போது ஒரு இளைஞா் பெரிய பையுடன் சந்தேகத்திடமான வகையில், மின்சார ரயிலில் ஏறினாா். அவரைப் பின் தொடா்ந்து சென்ற போலீஸாா், பெரம்பூா் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
பையை சோதனை செய்ததில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. விசாரணையில் புரசைவாக்கத்தைச் சோ்ந்த அபிஷேக் (40) என்பது தெரியவந்தது. பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இது குறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு போலீஸாா் வந்து எண்ணிய போது ரூ. 89 லட்சம் இருந்தது தெரியவந்தது.
அதைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.