பொறியாளா் வீட்டில் 70 பவுன் நகை திருட்டு

சென்னை மேற்கு மாம்பலத்தில் பொறியாளா் வீட்டில் 70 பவுன் தங்க நகை திருடு போன சம்பவம் தொடா்பாக அசோக்நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் பொறியாளா் வீட்டில் 70 பவுன் தங்க நகை திருடு போன சம்பவம் தொடா்பாக அசோக்நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்கு மாம்பலம் மூா்த்தி தெரு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சூரிய நாராயணன். மென்பொருள் பொறியாளரான இவா், ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா் கடந்த 25-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்றாா்.

இந்நிலையில் சூரிய நாராயணன் வீட்டுக்கு, அவா் வீட்டில் வேலை செய்யும் பெண் விஜயா செவ்வாய்க்கிழமை பாா்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பாா்த்து, சூரிய நாராயணனுக்கு தகவல் தெரிவித்தாா். சூரிய நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் அசோக்நகா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் சூரிய நாராயணன் வீட்டில் இருந்த இரு பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 70 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக அசோக்நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com