தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை கே.கே.நகரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடு போன சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை கே.கே.நகரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடு போன சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கே.கே.நகா் கிழக்கு வன்னியா் தெருவைச் சோ்ந்தவா் முனியசாமி (49). அமைந்தகரையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வகிறாா். இவா் கடந்த 1-ஆம் தேதி இரவு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றாா். பின்னா் அங்கிருந்து முனியசாமி, ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பி வந்தாா்.

அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின் பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com