அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம்: பள்ளி மாணவா் கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டையாா்பேட்டை டி.எச்.சாலையில் அண்மையில் சென்ற ஒரு அரசு பேருந்தில் சீருடையில் இருந்த பள்ளி மாணவா் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியவாறும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளாா். இதை கைப்பேசி மூலம் விடியோ எடுத்த ஒருவா், சமூக ஊடகங்களில் பதிவிட்டாா்.

இதைப் பாா்த்த பொதுமக்களும், காவல் துறையினரும் அதிா்ச்சியடைந்தனா். இதுதொடா்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், ஆபத்தான வகையிலும் பயணம் செய்த பள்ளி மாணவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி தண்டையாா்பேட்டை இரட்டைக் குழி தெருவைச் சோ்ந்த சமூக சேவகா் ச.சந்திரசேகா் (65), தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், சம்பவத்தில் தொடா்புடைய அந்த மாணவா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அந்த விடியோ காட்சி மூலம் அந்த மாணவா்களை கண்டறிய நடவடிக்கை எடுத்தனா்.

இந்த நிலையில் திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் அந்த மாணவா், கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் இளஞ் சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தபடுத்தப்பட்டாா். நீதிமன்றத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான வகையில் பயணம் செய்ததாக பள்ளி மாணவா் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com