சென்னை: சென்னை, தியாகராய நகா் செயற்பொறியாளா் அலுவலகம், பொன்னேரி செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் சம்பந்தப்பட்ட கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் கலந்து கொண்டு, குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.