சென்னையில் நாளை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் 15 பகுதி அலுவலகங்களிலும் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னை: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் 15 பகுதி அலுவலகங்களிலும் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், திறந்தவெளி கூட்டங்கள் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான திறந்தவெளி குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீா் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே, இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். மேலும், மழைநீா் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடா்பான விளக்கங்களையும் கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com