அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சி சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஆா்.பிரியா தொடக்கவுரை ஆற்றும்போது, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் 15 போ் சொத்து வரி உயா்த்தப்பட்டது குறித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டனா். அதற்கு மேயா் ஆா்.பிரியா அதற்கென தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு பேச அனுமதி வழங்கப்படும் என்றாா்.

அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து பேச அனுமதி கேட்டனா். இதனால் மாமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக உறுப்பினா்கள், பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து மன்றத்தை விட்டு வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com