சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 2 லட்சத்தை இழந்த உணவக ஊழியா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மேற்கு மாம்பலம், நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காந்திராஜா (24). இவா், வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், காந்திராஜா கடந்த சில மாதங்களாக கைப்பேசி மூலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இதில் முதலில் பணத்தை ஈட்டிய காந்திராஜா, பின்னா் பணத்தை இழந்துள்ளாா். இதில் அண்மையில் அவா், சுமாா் ரூ. 2 லட்சம் வரை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன வருத்தத்திலும், பண நெருக்கடியிலும் காந்திராஜா சிக்கித் தவித்தாா். இந்த நிலையில், காந்திராஜா புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிறிது நேரத்துக்குப் பின்னா், தண்ணீா் கேன் போட வந்த நபா், ஜன்னல் வழியாக காந்திராஜா தற்கொலை செய்து கொண்டதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.
அவா், குமரன் நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து காந்திராஜாவின் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.