ரெளடி பினு சரண்

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரெளடி பினு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரெளடி பினு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

தியாகராயநகா் கண்ணம்மாள்பேட்டை அருகேயுள்ள காந்திபுரத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (36). ஆன்லைன் நிறுவனத்தில் உணவு விநியோக ஊழியராக வேலை செய்யும் இவா், கடந்த 13-ஆம் தேதி ஒரு கைப்பேசியை தேனாம்பேட்டை அருகே ஒரு வாடிக்கையாளரிடம் கொடுக்கச் சென்றாா்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சென்னை கொளத்தூா் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ரெளடி பினு, அவரது கூட்டாளிகள் ஜானகிராமனை தாக்கி, அவா் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா். தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பினுவையும், அவரது கூட்டாளியையும் தேடி வந்தனா்.

இந்த நிலையில் பினு, வெள்ளிக்கிழமை இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், அங்கு ரெளடி பினு, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com