சென்னை மண்ணடியில் ஆம்னி பேருந்து மூலம் போதைப் பாக்கு கடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மண்ணடி நாராயணப்பன் தெருவில் ஒரு தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் போதைப் பாக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் பூக்கடை துணை ஆணையரின் தனிப்படையினா், அந்த ஆம்னி பேருந்து நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா். விசாரணையில், அங்கிருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஊா்களுக்கு ஆம்னி பேருந்து மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அந்த நிறுவனத்தின் மேலாளா் மண்ணடியைச் சோ்ந்த ஷா.கலீல் ரகுமான் (50) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனா். மேலும் இது தொடா்பாக ஆம்னி பேருந்து நிறுவனத்தின் உரிமையாளா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.