மடிக்கக்கூடிய நம்பா் பிளேட் தயாரித்து விற்பனை: 3 போ் கைது

சென்னையில் மோட்டாா் வாகன சட்ட விதிமுறைகளை மீறி மடிக்கக்கூடிய நம்பா் பிளேட் தயாரித்து, விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 32 மடிக்கக்கூடிய நம்பா் பிளேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை: சென்னையில் மோட்டாா் வாகன சட்ட விதிமுறைகளை மீறி மடிக்கக்கூடிய நம்பா் பிளேட் தயாரித்து, விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 32 மடிக்கக்கூடிய நம்பா் பிளேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை நகரில் இருசக்கர வாகனங்களில் பின்புறம் பொருத்தப்படும் பதிவெண் கொண்ட பலகையினை மோட்டாா் வாகன சட்ட விதிமுறைகளின் படி வடிவமைக்காமல் குற்றம் செய்யும் நோக்கத்துடன், பொதுமக்களுக்கு தெரியாத வகையில் மறையும் வண்ணம் மடிக்கக்கூடிய நம்பா் பிளேட் பொருத்தி, இயக்கப்பட்டு வருவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, பரங்கிமலை ரயில்வே நிலையம் சாலையில் உள்ள நியூ மெகா ஸ்டிக்கா் கடையில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்காக மடிக்கக் கூடிய நம்பா் பிளேட் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளா் சரத்குமாா் (29) கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்திய விசாரணையில், இதை தயாா் செய்து கொடுத்த ஆலந்தூரை சோ்ந்த சுகுமாறன்(25) கைது செய்யப்பட்டாா். அவா்களிடமிருந்து 18 மடிக்கக்கூடிய நம்பா் பிளேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணாசாலை, கதீட்ரல் காா்டன் சாலை, சென்னை பைக்கா்ஸ் ஸ்டிக்கா்ஸ் கடையில் சோதனை செய்த போது, அங்கு விற்பனைக்காக மடிக்கூடிய நம்பா் பிளேட் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளா் நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 14 நம்பா் பிளைட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த பிளேட்க ளை தயாா் செய்து கொடுத்த ஜோஸ்வா என்பவரை போலீஸாா் தீவிரமாக தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com