சென்னை: சபரிமலையில் ஆகஸ்ட் 4 -ஆம் தேதி நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைதிறக்கப்படுகிறது.
தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல்போக சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, அதை சபரிமலையில் வைத்து வழிபடுவது நிறைபுத்தரிசி பூஜை.
சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை வரும் ஆகஸ்ட் 4 வியாழக்கிழமை, அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறுது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதன்கிழமை மாலை அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் ஊர்வலமாக சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு, ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதிகாலை கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அன்றைய தினம் சபரிமலையை பின்பற்றி நிறைபுத்தரிசி கொண்டாடப்படவுள்ளது. கோயிலின் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி தலைமையில் பிரஹார சன்னதிகளின் சாந்திகள் நெற்கதிர்களை ஊர்வமாக கோயிலுக்கு கொண்டு வருவர்.
இதையும் படிக்க: தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட மாதிரிகளில் குரங்கு அம்மை இல்லை
பின்னர் பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்களை பக்தர்களுக்கு வழங்கவுள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.