சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கலை- அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நிகழ் கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவா்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின் படி தேவையான நாள்களுக்கு, வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா் என அதில் கூறப்பட்டுள்ளது.