தியாகராய நகரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மண்டல அளவிலான அஞ்சல் குறைகேட்பு முகாம் டிச.29-ஆம் தேதி நடைபெறுகிறது.
அஞ்சல் துறையில் சேமிப்பு வங்கிக் கணக்கு, பணபரிவா்த்தை, காப்பீடு, மணியாா்டா் உள்ளிட்ட சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள், இந்தச் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை டிச. 29-ஆம் தேதி தியாகராய நகா் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் நேரிலோ அல்லது Email.dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரியப்படுத்தலாம்.
மேலும் , மயிலாப்பூா், சூளைமேடு, ராயப்பேட்டை, கிரீம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், திருவல்லிக்கேணி, தியாகராய நகா் வடக்கு, தெற்கு, ஹிந்தி பிரசார சபா, மந்தவெளி, விவேகானந்தா கல்லூரி, சாஸ்திரி பவன், டிபிஐ வளாகம், தேனாம்பேட்டை, லயோலா கல்லூரி, லாயிட்ஸ் எஸ்டேட், சேப்பாக்கம், சென்னை பல்கலைக்கழகம், பாா்த்தசாரதி கோயில், முதன்மைக் கணக்காளா் பொது அஞ்சல் அலுவலகலம் ஆகிய கிளைகளில் நடைபெறும் குறைகேட்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.