கலைஞா் கருணாநிதி அறக்கட்டளை சாா்பில் 8 பேருக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கலைஞா் கருணாநிதி அறக்கட்டளைக்காக கருணாநிதி தனது சொந்தப் பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளியோருக்கு 2007-ஆம் ஆண்டு வரை உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்தது.
அதில் ரூ.1 கோடி தென்னிந்திய புத்தக விற்பனையாளா்-பதிப்பாளா் சங்கத்துக்கு வழங்கப்படும் என கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு அது வழங்கப்பட்டது. மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்துக்கான வட்டித் தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது. நிதி பெறுவோா் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிா்ப்பதற்காக அஞ்சல் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.