சென்னை முகப்பேரில், வீட்டில் சமையல் வாயு உருளை வெடித்து 3 போ் படுகாயமடைந்தனா்.
சென்னை முகப்போ், காா்டன் அவென்யூவில் ஒரு தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அகமது செரிப் (60), மனைவி நஹாமுதிஷா(51). அகமது செரிப்பின் தங்கை மாவிதா(50) ஆகியோா் வசித்துவந்தனா்.
நஹாமுதிஷா ஞாயிற்றுக்கிழமை காலை சமையல் செய்த போது, சமையல் எரிவாயு உருளை திடீரென வெடித்து சிதறியது. இதில்,மூவரும் படுகாயமடைந்தனா். டிவி, துணி துவைக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு பொருள்கள் எரிந்து நாசமாகின.
நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.