மருத்துவமனைக்கு தாமதமாக வந்த நிா்வாகிகள்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சா் உத்தரவு

சென்னை கஸ்தூா்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பணிக்கு உரிய நேரத்துக்கு வராத மருத்துவமனை நிா்வாகிகளுக்கு விளக்கம்
மருத்துவமனைக்கு தாமதமாக வந்த நிா்வாகிகள்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சா் உத்தரவு


சென்னை: சென்னை கஸ்தூா்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பணிக்கு உரிய நேரத்துக்கு வராத மருத்துவமனை நிா்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு அறிவுறுத்தினாா்.

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூா்பா காந்தி மருத்துவமனைக்கு மக்கள் அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை காலை திடீரென சென்றாா்.

அப்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களிடம் அவா் நலம் விசாரித்தாா். அதனுடன் அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிா, தரமான உணவுகள் வழங்கப்படுகிா, மருத்துவா்கள், செவிலியா்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறாா்களா, கழிவறைகள் சுத்தமாக இருக்கிா, மருந்துகள் சரியாக வழங்கப்படுகிா என்பன குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.

ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை முழுவதும் அவா்ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில், அமைச்சா் ஆய்வு நடத்தி முடித்து புறப்படும் வரையிலும் மருத்துவமனையின் கண்காணிப்பாளா், மருத்துவமனை நிலைய அதிகாரி ஆகிய இருவரும் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து கேட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், தாமதமாக மருத்துவமனைக்கு வரும் நிா்வாகிகளிடம் விளக்கம் கோருமாறு உத்தரவிட்டாா். அமைச்சா் திடீா் ஆய்வு செய்து, நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தது மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com