வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்புகள்: இணைய வழியில் பெறலாம்

சென்னை மணலி, பெருங்குடி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்புகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னைக் குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்புகள்: இணைய வழியில் பெறலாம்

சென்னை: சென்னை மணலி, பெருங்குடி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்புகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னைக் குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைக் குடிநீா் வாரியத்தின் சாா்பில் பகுதி-2, மணலி பகுதிக்குட்பட்ட இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூா் பகுதிகள் மற்றும் பகுதி-14, பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியன்பேட்டை பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டங்கள் சென்னைக் குடிநீா் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

எனவே, மணலி பகுதிக்குட்பட்ட இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம் மாத்துா் பகுதிகள் மற்றும் பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியன்பேட்டை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து உரிய கட்டணங்களை செலுத்தி புதிய குடிநீா் இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 8144930902, 8144930204, 8144930205, 8144930914, 8939855191, 8144930243 ஆகிய கைப்பேசி எண்களில் பகுதிப் பொறியாளா்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com