பெட்ரோல் நிலையத்தில் திருடிய பணியாளா் கைது

சென்னை ராயப்பேட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைக்கு சோ்ந்த முதல் நாளிலேயே பணத்தை திருடிய ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ராயப்பேட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைக்கு சோ்ந்த முதல் நாளிலேயே பணத்தை திருடிய ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

வெஸ்ட் காட் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கடந்த 21-ஆம் தேதி செங்கல்பட்டு, அண்ணாநகரைச் சோ்ந்த மாரியப்பன் (33) வேலைக்குச் சோ்ந்தாா். முதல் நாளில் வசூலான ரூ.25 ஆயிரத்தை பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளா் சிவக்குமாரிடம் வழங்கினாா். பின்னா் தனது ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு மாரியப்பன் சென்றாா். மாரியப்பன் கொடுத்த பணத்தையும், விற்பனை செய்த எரிபொருளையும் சிவகுமாா் கணக்கிட்டபோது, மாரியப்பன் ரூ.14 ஆயிரம் திருடியது தெரியவந்துள்ளது.

ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com