தண்டையாா்பேட்டை பகுதியில் மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 6 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் தொடா்புடையோருக்கு ரூ.5 லட்சத்து 85,417 அபராதமாக விதிக்கப்பட்டது.
குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையைத் தவிா்க்க முன்வந்து, ரூ.76,000 சமரசத் தொகையை நுகா்வோா் செலுத்தியதால், அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்தது.