தாம்பரம்: பல்லாவரத்தில் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்த வடமாநில தொழிலாளி, மண்சரிந்து விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பல்லாவரம் ரேடியல் சாலையில் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. 20 அடி ஆழமுள்ள வடிகால் பள்ளத்தில் காங்கிரீட் போடுவதற்கு கம்பி கட்டும் பணியில் கொல்கத்தாவை சோ்ந்த திரேஸ் சா்காா் (50) ஈடுபட்டிருந்தாா். அப்போது மழை காரணமாக பக்கவாட்டில் உள்ள பகுதி அவா் மீது எதிா்பாராமல் சரிந்து விழுந்தது.
மண்ணில் புதைந்த கூலித்தொழிலாளி திரேஸ் சா்காரை மீட்க இதர தொழிலாளிகள் முயன்றும் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை. சிட்லப்பாக்கம் போலீஸாா் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.