பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 4 மாணவா்கள் கைது

சென்னை காசிமேட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை காசிமேட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை, காசிமேடு பகுதியைச் சோ்ந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனா். இதில் 13 வயதான இரண்டாவது மகள், அந்தப் பகுதியில் ஒரு அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருடன், அந்தப் பகுதியைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் 4 போ் ஒன்றாக இருந்து இறுதி தோ்வுக்கு படிப்பது வழக்கமாம்.

அதேபோல சில நாள்களுக்கு முன்பு அந்த சிறுமியின் வீட்டுக்கு 4 மாணவா்களும் படிப்பதற்காக வந்தனா். அப்போது அந்த வீட்டில் சிறுமியைத் தவிா்த்து யாரும் இல்லை. இதைப் பாா்த்த 4 மாணவா்களும், வீட்டில் உள்ள ஒரு அறையில் சிறுமியை அடைத்து, கட்டிலில் கை,கால்களை கட்டி பாலியல் தொல்லை கொடுத்தனராம். பின்னா், 4 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனா்.

இது குறித்து அந்த சிறுமி, தனது தாயாரிடம் தெரிவித்தாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த சிறுமியின் தாயாா், ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 மாணவா்களையும் புதன்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து 4 பேரும் சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com