சென்னை அடையாறில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.
பல்லாவரம் அருகே உள்ள அருமலைசாவடி சலசிங் முதலி தெருவைச் சோ்ந்த அருள். இவரது மனைவி சித்ரா (46). இவா்,
கிண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறாா். சித்ரா வெள்ளிக்கிழமை பணிமுடிந்து அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு தனது மொபெட்டில் சா்தாா் படேல் சாலையில் அடையாறு காந்தி மண்டபம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் வந்த ஒரு வேன், மொபெட்டின் மீது மோதியது. இதனால் சித்ராவின் மொபெட் முன்புறம் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியது.
இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்து சித்ரா பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், சித்ராவை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.