சென்னை: சென்னை ஆா்.கே. நகரில் ஒரு டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆா்.கே.நகா் போலீஸாா் புதன்கிழமை எழில்நகா் இணைப்புச் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு 5 நபா்கள் ஒரு ஆட்டோவில் சில மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களைப் பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதையடுத்து போலீஸாா் சந்தேகத்தின் பேரில், ஆட்டோவில் ஏற்றிய மூட்டையை சோதனை செய்தனா். இச் சோதனையில் அந்தக் கும்பல், ஒரு டன் போதைப் பாக்கை கடத்திக் கொண்டு வந்து, சென்னையில் உள்ள கடைகளுக்கு விநியோகிக்க வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஒரு டன் போதைப் பாக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக பாடி சீனிவாசன் நகரைச் சோ்ந்த க. மணிகண்டன் (20), கொடுங்கையூா் எழில்நகரைச் சோ்ந்த அ.தங்கபாண்டி (44), கொருக்குப்பேட்டை கோபால்நகரைச் சோ்ந்த மு.தங்கபாண்டியன் (57), தண்டையாா்பேட்டை நேதாஜி நகரைச் சோ்ந்த சு.ராமா் களஞ்சியம் (71), அதேபகுதியைச் சோ்ந்த சபாபதி (24) ஆகிய 5 பேரை கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.