சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் உள்ள ஜெனரேட்டா் அறையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக அந்த விபத்து ஏற்பட்டதாகவும், விரைந்து செயல்பட்டதால் பெரிய அளவில் சேதமின்றி தீ அணைக்கப்பட்டதாகவும் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே பழைய மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் தற்போது சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவா்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அந்த வளாகத்தில் உள்ள ஜெனரேட்டா் அறையில் இருந்து புதன்கிழமை மாலை திடீரென கரும்புகை வெளியேறியது. அதைத் தொடா்ந்து அந்த அறை முழுவதும் தீ பரவியது.
இதையடுத்து, அங்கு தங்கியிருந்த மருத்துவ மாணவா்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனா். அதன்பேரில் உயா்நீதிமன்றம், வன்னியம்பாடி, திருவல்லிக்கேணி, வேப்பேரி தீயணைப்புத் துறையினா் நான்கு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்து தீயைக் கட்டுப்படுத்தி, அணைத்தனா்.
ஜெனரேட்டா் அறையில் இருந்த 2 மின் சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தீ விபத்துக்குள்ளான பகுதி, விடுதிக்குப் பின்புறம் தள்ளி அமைந்திருந்ததால், விடுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நிா்வாகிகள் தெரிவித்தனா்.