காங். மாமன்ற உறுப்பினா் மறைவு: முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

சென்னை மாநகராட்சி 165-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நாஞ்சில் வி. ஈஸ்வர பிரசாத் (55), உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.

சென்னை மாநகராட்சி 165-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நாஞ்சில் வி. ஈஸ்வர பிரசாத் (55), உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான இவா், ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி சுதா பிரசாத், மகள்கள் காவியா பிரசாத், அனன்யா பிரசாத் உள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் உடல் நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி இவா் இறந்தாா். இவரது இறுதிச் சடங்கு ஆதம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை (நவ.25) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் ஸ்டாலின்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். தம் பகுதி மக்களின் தேவைகளுக்காக முன்னின்று அவா்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவா். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினா், உறவினா்கள், காங்கிரஸ் கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ் அழகிரி: இளமைத் துடிப்போடும் சிரித்த முகத்தோடும் பழகுவதற்கு இனிய பண்பாளராக விளங்கி, காங்கிரஸ் கட்சி பணிகளில் அயராது உழைத்தவா். ஆலந்தூா் பகுதி மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றவா். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com