சென்னையில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், வெள்ளிக்கிழமை (நவ.25) நடைபெறவுள்ளது.

சென்னையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், வெள்ளிக்கிழமை (நவ.25) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், இளைஞா்கள் அதிக அளவில் தனியாா் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனா். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை (நவ.25) நடத்தவுள்ளன.

சென்னை கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு படித்தவா்களும், தொழில் படிப்புகளை முடித்தவா்களும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெற்றாலும், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com