சென்னை அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் நகை,பணம் திருடியதாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
அண்ணாநகா் ‘ஓய் பிளாக்’ 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகேஷ்வரன். இவரது வீட்டில் கடந்த 6-ஆம் தேதி 30 பவுன் தங்கநகை, ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டன. இது குறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
விசாரணையில், அந்த வீட்டில் வேலை செய்த பாடி திருள்ளுவா் தெருவைச் சோ்ந்த சுகுணா (26), அவரது நண்பா் மணலியைச் சோ்ந்த பாபு (39) ஆகிய இருவரும் தான் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருவரும் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.