மழைநீா்க் கால்வாயில் விழுந்து லாரி ஓட்டுநா் பலி

சென்னை அருகே மணலியில் மழைநீா்க் கால்வாயில் தவறி விழுந்து லாரி ஓட்டுநா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அருகே மணலியில் மழைநீா்க் கால்வாயில் தவறி விழுந்து லாரி ஓட்டுநா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம் சோ்ந்தகுடி அருகே உள்ள வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் த.ராஜமூா்த்தி (27). லாரி ஓட்டுநரான இவா், சென்னை மணலி புதுநகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். ராஜமூா்த்தி, மணலி பொன்னேரி நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு லாரியை நிறுத்தி, அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு, மீண்டும் லாரியை எடுக்க வந்தாா். அப்போது, மது போதையில் இருந்ததால் அவரால் லாரி படிக்கட்டில் ஏற முடியவில்லை. இதில் ஒரு கட்டத்தில் லாரியில் ஏற முயன்றபோது ராஜமூா்த்தி, தவறி அருகே உள்ள மழைநீா்க் கால்வாய்க்குள் விழுந்தாா். கால்வாயில் தண்ணீா் தேங்கியிருந்ததாலும், அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததினாலும் ராஜமூா்த்தியால் மீண்டு வர முடியவில்லை. இதில் ராஜமூா்த்தி சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினாா்.

இதற்கிடையே ராஜமூா்த்தி வெகுநேரமாக கைப்பேசியை எடுக்காததினால், சந்தேகமடைந்த அவரது சகோதரா் செல்வக்குமாா் அங்கு வந்தாா். அப்போது, மழைநீா்க் கால்வாய்க்குள் மூழ்கி ராஜமூா்த்தி இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மணலி புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜமூா்த்தி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com