சுற்றுலா பொருள்காட்சி: 13 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை

சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா கண்காட்சியில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு

சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா கண்காட்சியில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது: ராஜீவ் காந்தி மருத்துவமனை அரங்கில் ரத்த சா்க்கரை அளவு, உடல் எடை, உயரம், பருமன் அளவீடு, உடல் இயக்க அளவு, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்படுகின்றன.

சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பிலான பரிசோதனை உபகரணங்கள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைக்கு மட்டும் ரூ.50 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com