இன்று முதல் திருத்தணிக்கு தைப்பூசம் சிறப்பு ரயில் இயக்கம்

தைப்பூசத்தை முன்னிட்டு சனிக்கிழமை (பிப்.4) முதல் அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

தைப்பூசத்தை முன்னிட்டு சனிக்கிழமை (பிப்.4) முதல் அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தைப்பூசத்தை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே சனிக்கிழமை (பிப்.4) முதல் திங்கள்கிழமை (பிப்.6) வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளன.

அரக்கோணத்திலிருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43407) காலை 10.45 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43418) காலை 11.13 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்திலிருந்து மாலை 1 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43411) பகல் 1.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43422 பகல் 1.48 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்திலிருந்து பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43413) மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் மாலை 3.20 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43424) மாலை 3.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com