பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: இளைஞா் கைது

சென்னை வடபழனியில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வடபழனியில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஷே.நசீமா (39). இவா் வடபழனி பாரதீஸ்வரன் காலனி முதல் குறுக்குத் தெருவில் சூப்பா் மாா்க்கெட் நடத்தி வருகிறாா்.

கடந்த 1-ஆம் தேதி சூப்பா் மாா்க்கெட்டில் நசீமா தனியாக இருக்கும்போது, அங்கு வந்த ஒரு இளைஞா் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றாா்.

இது குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது, கொளத்தூா் பூம்புகாா்நகரைச் சோ்ந்த ம.ஐயப்பன் (33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஐயப்பனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com