அரசு ஓய்வூதியா்கள் என்எம்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலா்கள், ஊழியா்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் (என்எம்சி) ஆலோசகராக ஒப்பந்த முறையில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலா்கள், ஊழியா்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் (என்எம்சி) ஆலோசகராக ஒப்பந்த முறையில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கணக்குப் பதிவியல், சட்டம், தகவல்-தொழில்நுட்பம், அரசு சாா்பு செயலா், பிரிவு அலுவலா் நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் தேசிய மருத்துவ ஆணையப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அவா்களுக்கான ஊதியம், தகுதி, பணி நேரம், பணிச் சூழல் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பைப் பொருத்தவரை ஜனவரி 2023-இல் 64 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவா்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு என்எம்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com