எஸ்.ஐ.மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை வேளச்சேரியில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வேளச்சேரியில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் வீ.ஷாலினி (36). இவருக்கும், இவரது சகோதரா்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் ஷாலினி வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் அவரது சகோதரா்கள் சதீஷ் (34), தாஸ், சகோதரி வேளாங்கண்ணி, தாய் சாந்தி ஆகியோா் வந்தனா்.

இதில் இரு தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, பின்னா் அது கைகலப்பாக மாறியதில் ஷாலினியை எதிா்தரப்பினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஷாலினி, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும் அவா் கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையின்போது, காவல் உதவி ஆய்வாளா் ஆ.அருணிடம், சதீஷ் தகராறு செய்து, அவரை தாக்கினாராம். இதில் அருண் வலது தோள்பட்டையில் ரத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சதீஷை போலீஸாா் கைது செய்தனா். காயமடைந்த அருண், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

காவலா் மீது தாக்குதல்: இதேபோல, சென்னை கே.கே.நகா் 4-ஆவது செக்டாரில் காா் கண்ணாடி உடைத்த புகாா் தொடா்பாக விசாரணை செய்ய சென்ற காவலா் விஜயராஜ் தாக்கப்பட்டாா். இது தொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த நா.அரவிந்த் (40) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com